பள்ளிப்பை மட்டும் அல்ல… குழந்தைகளின் மன சுமையையும் இறக்குவோம்
– சுமையாகத் தெரியும் கல்வியை மகிழ்ச்சியான கற்றலாக மாற்றும் நேரம்
பள்ளி செல்லும் குழந்தைகளை கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா?
சின்ன சின்ன உடம்புகள்… ஆனால் முதுகில் பெரிய பெரிய பைகள்.
பொதிமூட்டையை முதுகில் சுமந்து மிகப்பெரிய மலையை ஏறுவது போல் பள்ளி செல்லும் காட்சியை, பெரியவர்களால் கூட தூக்க முடியாத பைகளை,சிறு வயது முதலே அந்த சுமையை தூக்கி தூக்கி பழகிய அவர்களுக்கு சுமை முதுகில் மட்டுமல்ல கல்வியும் சுமை(Hard) என்ற எண்ணத்தை அவர்களுக்குள் விதைத்திருக்கிறது.
அந்த பைகள் புத்தகங்களால் மட்டும் நிரம்பியவை அல்ல —
அதில் அழுத்தம், பயம், எதிர்பார்ப்பு, மதிப்பெண் சுமை எல்லாமே நிறைந்திருக்கிறது.
மனதில் ஒரு கேள்வி எழுகிறது:
“கல்வி குழந்தைகளுக்கு சுமையாக இருக்க வேண்டுமா?
அல்லது,அது மகிழ்ச்சியான பயணமாக இருக்க வேண்டாமா?”
