Showing posts with label War. Show all posts
Showing posts with label War. Show all posts

Sunday, 15 March 2026

"War and peace"

 "வன்முறைக்கு எதிரான மனிதனின் குரல், மனிதன் மனிதத்தை மறந்துவிட்டான்".

இந்த பூமி ஏற்கனவே எண்ணற்ற வன்முறைகளைக் கண்டுவிட்டது. எத்தனையோ போர்கள் நடந்துவிட்டன. எத்தனையோ உயிர்கள் அழிந்துவிட்டன.



ஆனாலும், உலகின் எங்காவது “போர்”, “வன்முறை”, “அழிவு” என்ற வார்த்தைகள் கேட்கும்போதெல்லாம் மனம் அதிர்ச்சியடைவது இயல்பாகி விட்டது.

ஆனால் ஒரு கேள்வி நம்மை தொடர்ந்து துரத்துகிறது.

இவ்வளவு அனுபவங்களையும், இவ்வளவு வரலாறுகளையும், இவ்வளவு துயரங்களையும் கடந்த பிறகும், ஏன் மனிதனுக்குள் இன்னும் வன்முறை உயிரோடு இருக்கிறது?


ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரக்கம் இருக்கிறது.அதே நேரத்தில், காயம் பெற்ற கோபமும் இருக்கிறது.அன்பும் இருக்கிறது.ஆனால் தீராத வெறுப்பும் சில நேரங்களில் உள்ளே பதுங்கிக் கிடக்கிறது.

அந்த வெறுப்பு வெளிப்படாத போது மனிதன் மனிதனாக இருக்கிறான்.

அது வெளிப்படும் போது குடும்பங்கள் உடைகின்றன; உறவுகள் சிதைகின்றன; சமூகங்கள் பிரிகின்றன; நாடுகள் கூட போர்க்களமாகி விடுகின்றன.

இன்று உலகின் பல பகுதிகளில் நடக்கும் மோதல்கள் இதற்கே சாட்சி.


இரு மனிதர்களுக்கிடையிலான சண்டை,

இரு குடும்பங்களுக்கிடையிலான பகை,

இரு சமூகங்களுக்கிடையிலான வெறுப்பு,

இரு நாடுகளுக்கிடையிலான போர் —


இவை எல்லாவற்றிற்கும் வேராக இருப்பது ஒரே விஷயம்:

"மனிதன் மனித்தை மறந்துவிட்டான்"

இன்றைய உலகில் மனிதன் மனிதத்திற்காக வாழ்வதில்லை.


சொத்துக்காக ஓடுகிறான்.

பதவிக்காக போராடுகிறான்.

அதிகாரத்திற்காக எரிகிறான்.

பணம், புகழ், பாதுகாப்பு, ஆதிக்கம் — இவற்றிற்காக அவன் அளவில்லாமல் ஆசைப்படுகிறான்.


அவனுக்குக் கிடைத்தது போதாது. இன்னும் வேண்டும். மற்றவரிடமிருந்தும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்காக அழிக்கவும் தயங்கவில்லை.

ஒரு உயிரை சுடுவது இவ்வளவு எளிதாக எப்படி மாறிவிட்டது?

ஒரு மனிதனின் கண்ணீரை பார்க்காமல் இருப்பது ஏன் இவ்வளவு சாதாரணமாகிவிட்டது?

இது தான் நம் காலத்தின் மிகப் பெரிய துயரம்.

“எதிர்காலத்தைப் பற்றி இவ்வளவு கவலைப்பட வேண்டுமா?” என்று யாராவது கேட்கலாம்.

ஆமாம்,நம் வாழ்க்கையைப் பற்றிய கவலையை விட அதிகமாக நம் குழந்தைகளின் வாழ்க்கையைப் பற்றிய கவலை இருக்கிறது.

ஏனெனில் அவர்கள் இந்த உலகத்தில்தான் நாளை வாழப்போகிறார்கள்.

அவர்களின் குழந்தைகளும் இந்த பூமியில்தான் வாழப்போகிறார்கள்.

நாம் இன்று அமைதியாக இருந்தாலும், நாளை அமைதி இருக்கும் என யார் உறுதி தர முடியும்?

நாம் இன்று சிரித்தாலும், நாளை சிரிக்கக் கூடிய உலகம் இருக்கும் என யார் சொல்ல முடியும்?

மனிதகுலம் எதிர்கொள்ளப் போகும் பிரச்சினைகள் ஏராளம். குடிக்க தண்ணீர் இல்லாத காலம் வரலாம். பொருளாதார சீர்கேடுகள் அதிகரிக்கலாம். சுற்றுச்சூழல் மாசுபாடு பெருகலாம். பனிப்பாறைகள் உருகலாம். காலநிலை மாறலாம். இயற்கை சீற்றங்கள் அதிகரிக்கலாம்.

இந்த எல்லாவற்றையும் தாண்டி, மனிதன் தானே உருவாக்கிக் கொண்டிருக்கும் இன்னொரு பெரிய பேரழிவு — வன்முறை.


இயற்கை கொடுக்கும் துயரங்களை சமாளிக்க மனிதன் கற்றுக்கொள்ளலாம்.

ஆனால் மனிதன் மனிதனுக்கே துன்பம் கொடுக்கும் நிலையை எப்படி சமாளிப்பது? அது உலகின் மிகப் பெரிய அழிவாகிவிடும்.


வாழ்க்கை என்பது வெறுப்பதற்காக கிடைத்ததல்ல.

வாழ்க்கை என்பது வெல்வதற்காக மட்டுமல்ல.

"வாழ்க்கை என்பது வாழ்வதற்காக,.

மற்றவரையும் வாழ விடுவதற்காக".


அன்புபை விதைப்பதற்காக,

இரக்கம் காட்டுவதற்காக,

அமைதியை உருவாக்குவதற்காக தவிர அழிவை அல்ல.

இன்று உலகத்துக்கு மிகவும் தேவைப்படுவது புதிய ஆயுதங்கள் அல்ல.

புதிய அரசியல் கோஷங்கள் அல்ல.

புதிய பகைகள் அல்ல.

மனித மனங்களில் மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் மனிதம் தான்.


வன்முறைக்கு பதில் இரக்கம் வர வேண்டும்.

வெறுப்புக்கு பதில் புரிதலாக மாற வேண்டும்.

போருக்கு பதில் பேச்சு வார்த்தையில் தீர்வு காண வேண்டும்.

அழிவுக்கு பதில் அன்பு மலர வேண்டும்.

விட்டுக் கொடுத்து நியாயத்திற்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும்.

அப்போதுதான் நம் குழந்தைகள் பயமின்றி வாழும் உலகம் உருவாகும்.

அப்போதுதான் இந்த பூமி உண்மையாக மனிதர்களுக்கான பூமியாகும்.

நாம் இப்போது எதை விதைக்கிறோமோ, நாளை நம் பிள்ளைகள் அதையே அறுப்பார்கள்.

அதனால் வன்முறையை விதைக்க வேண்டாம்.

அமைதியை விதைப்போம்.

வெறுப்பை வளர்க்க வேண்டாம்.

மனிதத்தை வளர்ப்போம்.

ஏனெனில் இந்த உலகம் நமக்குப் பிறகு நம் குழந்தைகளுக்குரியது.

_Mr. Thinker ❤️💛

 War and peace 

#war_and_Peace #iran_isreal

 #chinna_america #violence #Humanity 

#save_people #mrthinker #Mr_Thinker

“நான் + நீ = நாம் interpretation of love

புரிதலும் விட்டுக் கொடுத்தலும் தான் கணவன் மனைவி உறவின் அடித்தளம் நான்… நீ… நாமாகும் தருணம்-2 திருமணம் ஒரு சாதாரண உறவு அல்ல. அது ரத்த உறவு அல...