கோடை மாணவர்களின் திறன்களை வளர்க்கும் மேடை
கோடை விடுமுறை காலத்தில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சில ஆலோசனைகள்,
*சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் ஆரோக்கியம் குறைபாடு ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருப்பதால் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உணவுடன் பழங்கள், நீர் சத்து உள்ள காய்கறிகள் எடுத்துக்கொள்ளவும்.
*தண்ணீர் அடிக்கடி குடிப்பது உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும். பாட்டில்களில் அடைத்த குளிர்பானங்களை அருந்துவதை தவிர்க்கவும்
*குழந்தைகள் வெளியில் சென்று விளையாட காலையும் மாலையும் அனுமதிக்கவும். வெயில் அதிகம் உள்ள மதிய வேளையில் வீட்டில் இருப்பது நல்லது
*செல்போனில் அதிக நேரம் மாணவர்கள் செலவிடுவதை தவிர்த்து ஆக்கபூர்வமாக கோடை விடுமுறையை பயன்படுத்த வேண்டும்.
*மாணவர்களின் திறன்களை வளர்த்துக்கொள்ள அவர்கள் விரும்பும் ஓவியம்,கணிதம், ஆங்கிலம், யோகா, இசை, பரதம்,நீச்சல் விளையாட்டு போன்ற தனித் திறமை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு வழிவகை செய்யவும்
*தினமும் மாணவர்களுடன் பெற்றோர்கள் கலந்துரையாடி கதை சொல்லி மற்றும் விளையாடி நேரம் செலவு செய்வது மாணவர்களின் ஆளுமை திறன், மற்றும் நம்பிக்கையை அதிகரிக்க உதவும்.
*மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்துவதும் எழுதும் திறனை வளர்ப்பதும் மிகவும் முக்கியம். செய்தித்தாள் வாசிக்க மற்றும் செய்தி கேட்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது எதிர்காலத்தில் மாணவர்கள் உயர்ந்த பதவி செல்லும் தேர்வுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
* பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் தனித் திறமையை கண்டறிந்து அதை வளர்க்க இந்த கோடை விடுமுறையை பயன்படுத்தி அவர்களை வெற்றியாளராக, இந்த சமுதாயத்தில் வலம்வர உதவ வேண்டும்.
நன்றி
திங் ஓஎஸ் கல்வி நிறுவனம்.