Sunday 23 April 2023

உலக புத்தக தினம்

புத்தகம் !

புத்தகம் எனும் புதையலை பற்றி என் மனம் நினைப்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைகின்றேன்.

இது கதையா இல்லை கவிதையா என்றெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியவில்லை, ஏதோ ஒன்று என் தனி,மனதின்கண் பட்டக் கருத்து,

புத்தகத்தை நேசிக்கும் ஒருவனாக,  புத்தக வாசிப்பின் வாசகனாக, புத்தகத்தின் அன்பில் நனைந்த காதலனாக, இந்த உலக புத்தக தினத்தன்று அதைப் பற்றி சில வரிகள்,

புத்தகம்! 

சொர்க்கத்தின் பாதை!

புத்தகம்! 

முடிவில்லாத பயணம்! 

புத்தகம்!

அது ஒரு தனி உலகம்..!

புத்தகம்!

அது அளவில்லா அறிவின் புதையல்! 

புத்தகம்! 

மனிதமாண்பின் தனித்துவம்! 

புத்தகம்!

மனித குலத்தின் வெளிச்சம்! 

புத்தகம்! 

வெற்றியின் பாத சுவடுகள்! 

புத்தகம்! 

சரித்திரத்தின் உண்மை முகம்! 

புத்தகம்! 

அறியாமையை அழிக்கத் துடிக்கும் பேராயுதம்! 

புத்தகம்! 

விலைமதிக்க முடியாத பொக்கிஷம்!

புத்தகம்!

மரணமில்லா வாழ்வு! 

புத்தகம்! 

மனிதனால் படைக்கப்பட்ட கடவுள்!




     நான் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்,  'சொர்க்கத்தின் வாசலை திறங்கள், சொர்க்கத்தை அனுபவியுங்கள்'

நன்றி

23/04/23.

No comments:

Post a Comment

காற்றுடன் காதல்!

காற்றே! நீ எப்படி இருக்கிறாய்?  காற்றே! நீ எங்கு இருக்கிறாய்?  காற்றே!  நேற்று?,நீ... என் காதில் பட்டு கீதமானாய்..! என் இதயத்துட...