“நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?”
முன்னேற்றம் என்ற பெயரில் மனிதநேயத்தை இழந்து கொண்டிருக்கும் சமூகத்தின் மீது ஒரு திறந்த கேள்வி.
ஒரு வீட்டில் எழுபது அல்லது எண்பது வயதான ஒரு பெரியவர் இருந்தால்…
அவர் அந்த வீட்டின் ஆசீர்வாதமா?அல்லது பாரமா?
இந்த கேள்வி என்னை சில நாட்களாக அமைதியாக இருக்க விடவில்லை.
நாம் வாழும் இந்த காலம் எங்கே சென்று கொண்டிருக்கிறது?
நாம் எதை முன்னேற்றம் என்று அழைக்கிறோம்?
பணமா? பதவியா? சுகவாசமா?
அல்லது மனிதநேயமா?
குடும்பத்தின் மையம் – கீழே உள்ள தலைமுறையா? மேலே உள்ள தலைமுறையா?
இன்று பெரும்பாலான குடும்பங்களில் நாம் காணும் ஒரு நிலை என்னவென்றால் –
நம் குழந்தைகளுக்கு நாம் அளிக்கும் அன்பு, மரியாதை, பாதுகாப்பு…
அதே அளவு நம் பெற்றோருக்கு கிடைக்கிறதா?
குழந்தைகளை கடவுளாகக் கருதும் நாம்,
நம்மை உருவாக்கியவர்களை ஏன் சாதாரண மனிதர்களாகவே பார்க்கிறோம்?
ஒரு முறை கொரிய நாட்டை சேர்ந்த என் நண்பர் ஒருவர் – என் வீட்டிற்கு வருகை தந்திருந்தார் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தை கால் தடுமாறி கீழே சாதாரணமாக விழுந்தது,அதை பார்த்தவுடன் அனைவரும் பதட்டமடித்துக் கொண்டு தூக்க ஓடினார்கள். அப்பொழுது அவர் சொன்னார்,“
"எங்கள் நாட்டில் மேலே உள்ள தலைமுறையை(பெரியவர்கள்)நாங்கள் அதிக அன்பும் அக்கறையும் கொண்டு கவனிப்போம். கீழே உள்ள தலைமுறைகள் (குழந்தை) அதைப் பார்த்து வளர்வார்கள்,ஆனால் இங்கே தலை கீழாக நடப்பது போல் தோன்றுகிறது.”என்று
அந்த வார்த்தைகள் என் மனதை அழுத்தியது, ஏனென்றால் அது உண்மை.
முதியோர் இல்லங்கள் – முன்னேற்றமா? அல்லது மனசாட்சி கேள்வியா?
இன்று நாம் பெருமையாகச் சொல்கிறோம் –
“முதியோர் இல்லங்கள் இருக்கின்றன… வசதிகள் இருக்கின்றன…”
Pros (சாதகங்கள்):
•தனிமையில் இருக்கும் பெரியவர்களுக்கு பாதுகாப்பான இடம்.
•மருத்துவ வசதி, உணவு, பராமரிப்பு.
•குழந்தைகள் வெளிநாட்டில் அல்லது வேலையால் தங்க முடியாத சூழ்நிலையில் ஒரு ஆதரவு அமைப்பு.
Cons (பாதகங்கள்):
•குடும்ப பாசம் இல்லாத வாழ்க்கை.
•“நான் தேவையற்றவன்” என்ற மன உளைச்சல்.
•தலைமுறை இடைவெளி அதிகரிப்பு.
•குழந்தைகள் “பெரியவர்களைப் பார்த்துக் கொள்வது அவசியமில்லை” என்ற மனப்பான்மையுடன் வளர்வு.
நாம் விதைப்பது – நாமே அறுப்போமா?
ஒரு குடும்பத்தில் பெற்றோருக்கு மரியாதை இல்லாத சூழலில் வளர்ந்த குழந்தை,
நாளை தன் பெற்றோரை எப்படி நடத்தும்?
நாம் இன்று நம் பெற்றோர்களை அலட்சியம் செய்தால்,
நாளை நம் குழந்தைகள் அதையே கற்றுக் கொள்ள மாட்டார்களா?
நாம் சொல்லிக் கொடுக்காமல் கற்றுக் கொடுக்கிறோம்.
நாம் பேசாமல் பழக்கப்படுத்துகிறோம்.
நாம் செயலில் விதைப்பது, நாளை நம் வாழ்க்கையில் விளையும்.
இந்திய மண் -மதிப்பும் மரியாதை மிகுந்த மண்
ஒரு காலத்தில் இந்தியா பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்த நாடாக இருந்தது.
“மாதா, பிதா, குரு, தெய்வம்” என்ற ஒழுக்கம்
இன்று “நான், என் குடும்பம், என் சுகம்” என்ற சுயநலமாக மாறிவிட்டதா?
முன்னேற்றம் என்ற பெயரில்
நாம் மனிதநேயத்தை இழந்துவிட்டோமா?
எதிர்கால சந்ததிகளின் வளர்ச்சி
இன்று நம் குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள்?
•பெற்றோரின் தியாகத்தை மதிக்காத வாழ்க்கை.
•வசதிக்கு முக்கியத்துவம், உறவுக்கு இல்லை.
•வயது ஒரு பாரம் என்ற எண்ணம்.
இதன் விளைவு:
உணர்ச்சி குறைந்த சமூக அமைப்பு.
தனிமை அதிகரிப்பு.
குடும்பம் என்ற அமைப்பு பலவீனமாகும்.
முதியவர்களின் அனுபவ அறிவு சமூகத்தில் இழக்கப்படும்.
அப்படியென்றால்… நாம் என்ன செய்ய வேண்டும்?
1.குழந்தைகளுக்கு பெரியவர்களின் மதிப்பை நடைமுறையில் காட்ட வேண்டும்.
2.வாரத்திற்கு ஒரு நாள் பெற்றோருடன் நேரம் செலவிட வேண்டும்.
3.பெரியவர்களின் அனுபவத்தை குடும்ப முடிவுகளில் பயன்படுத்த வேண்டும்.
4.“பாசம் ஒரு பொறுப்பு” என்பதை உணர்த்த வேண்டும்.
இறுதி கேள்வி…
நாம் ஒரு நாள் அந்த வயதுக்கு செல்வோம்.
அப்போது நம்மை யார் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறோம்?
அதேபோல இன்றே நாம் நடந்து கொள்ளத் தயாரா?
இந்த உலகம் மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு முன்
நம் வீடு மாற வேண்டும்.
நம் மனசாட்சி மாற வேண்டும்.
“பெரியவர்கள் ஒரு பாரமல்ல…அவர்கள் நம் வாழ்க்கையின் வேர்கள்.”
வேர்களை வெட்டிக் கொண்டு நிழல் தேடும் சமூகமாக நாம் மாற வேண்டுமா?
அல்லது வேர்களை காத்து என்றென்றும் வளர்ச்சியை உணரும் சமூகமாக இருக்க வேண்டுமா?
தீர்மானம் நம்முடையது.
_Mr. Thinker💛
—
MR. THINKER – Reflection Series #01
Think Deep. Live Responsible.
#MrThinker #ReflectionSeries #FamilyValues #GenerationalResponsibility #HumanDevelopment
Next time:
MR. THINKER – Reflection #02
Topic: Are We Raising Strong Children or Emotionally Dependent Adults?

No comments:
Post a Comment