Sunday, 1 March 2026

Episode 2 : "உனக்குள்ளே எரியுற தீ. அது வைரம்— வைராகியம்".

 #LifeLesson

Business School – Episode #2

Episode 2:  "உனக்குள்ளே எரியுற தீ. அது வைரம்— வைராகியம்".

இது கதை இல்லை. இது வாழ்க்கை. இது வாழ்ந்த வரலாறு.



Episode 1-ல் நாம் பார்த்தோம் —

ஒரே தொழில். ஒரே நாள். இரண்டு பாதைகள்.

இன்று…

ஒரே மனிதன். இரண்டு மரியாதை.

ஒரே ஊர். ஒரே காலம்.

ஆனா இரண்டு விதமான உள்ளம்.

🧍‍♂️ சின்ன ராமசாமி — காரணம் தேடுபவன்

 "தினமும் அவனுக்கு அவமானப்பட்டு அவமானப்பட்டு பழகிப்போச்சு,
அவன் உள்ளே இருந்த வைராக்கியத்தீ..
மெல்ல அனஞ்சிச்சுபோச்சு".

 எதுக்கெடுத்தாலும் கோபப்படுறது
பிறகு அந்த கோபம் சோகமா மாறுறது 
பிறகு அது மனச்சோர்வா ஆகிறதுனு வாடிக்கையாச்சு .

பெரும்பாலும்“என்ன செய்யறது … என் வாழ்க்கை இப்படித்தானு நொந்துக்குவான் .”

ஒரு வேலைய முடிக்க முயற்சி செய்யாம காலம் கடத்தி,ஏன் செய்யலன்றதுக்கும் காரணம் சொல்லுவான்.

தோல்விக்கு சூழ்நிலையை blame பண்ணுவான்.

விமர்சனம் வந்தா உடனே உடைஞ்சு  போவான்.

அவமானம் வந்தா ஒளிஞ்சுக்கிடுவான்.

அவனுக்கு மரியாதை  வேணும்னு ஆசைப்படுவான், ஆனா அந்த மரியாதைக்காண  தகுதிய உருவாக்க முயற்சி செய்யமாட்டான்.

அவன் தினமும் சொல்லுவான்:    “என்னை யாரும் மதிக்கலை…”

ஆனா அவன் தன்னையே மதிக்க ஆரம்பிச்சதே இல்லை.

🔥 பெரிய ராமசாமி — வலியை வைராகியமாக மாற்றியவன்

பெரிய ராமசாமிக்கும் வாழ்க்கை எளிதாக இருக்கல.

ஒரு நாள்…

அனைவருக்கும் முன்னால் அவனை அவமானப்படுத்தினார்கள்.

“உன்னால எதுவும் ஆகாது.”

அந்த வார்த்தை அவனை உடைக்கல.  அது அவனை உருவாக்குச்சு. அவன் ஓடல, ஒளியல.

அவன் ஒத்துக்கிட்டான்:

“ஆம்மா… இப்போ நான் பலவீனமாதான் இருகேனு, புருஞ்சுகிட்டான்.

ஆனா நான் வலிமையா மாறாம விடமாட்டேனு.”உறுதி எடுத்தான்.

அந்த நாளிலிருந்து அவன் இந்த மூணு விஷயத்தை விடாம முயற்சி பண்ணான்.

•அவமானத்தை மறக்கல. அந்த அவமானத்த அவன இயக்குற  வைராக்கிய சக்தியா மாத்துனான்.

•தன் பலவீனத்தை ஒத்துக்கிட்டான் .

•தினமும் 1% முன்னேற்றம் அடையணும்னு ஒவ்வொரு நாளும் முயற்சி செஞ்சான்.

வலி → வைராகியம்

வைராகியம் → ஒழுக்கம்

ஒழுக்கம் → மரியாதை

🥀 ஒரு நாள்…

சின்ன ராமசாமி பெரிய ராமசாமியிடம் கேட்டான்:

“எப்படி உனக்கு இவ்வளவு மரியாதை கிடைச்சது?”

பெரிய ராமசாமி அமைதியா சொன்னான்:

“நான் மரியாதை கேக்கல. நான் என்னை உருவாக்கினேன். உலகம் அதை பார்த்து மரியாதை தந்தது.”

🧠 Business Lesson 

👉 வைராகியம் இல்லாதவன் காரணம் தேடுவான்.

👉 வைராகியம் உள்ளவன் தீர்வு தேடுவான்.

👉 அவமானம் பலரை உடைக்குது.

👉 வைராகியம் சிலரை உருவாக்குது.



"பிசினஸ் தொடங்கின ஆரம்பத்துல பெரும்பாலான தொழில் முனைவோர் சந்திக்கிற பிரச்சனைய,அவமானத்த,வலிய, வேதனைய, யார் ஒருத்தரால வைராக்கியமா மாத்த முடியுதோ, வைராக்கிய தீய அணைய விடாம பாத்துக்க முடியுதோ அவங்களால இந்த போராட்டம் மட்டுமில்ல வாழ்க்கையில எந்த போராட்டம்னாலும் சாதிச்சு காட்டுவாங்க".

ஒரு அவமானம்…                                          ஒரு வார்த்தை…                                            ஒரு தருணம்…

அது சிலரை அமைதியா உடைக்குது.  சிலரை அமைதியா உருவாக்குது.

உன்னை தாழ்த்திய தருணம் —              அது முடிவல்ல..

அதை எரிபொருளா மாத்துற சக்திதான் வைராகியம்.

உள்ளுக்குள் எரியுற தீ🔥.

அதை அணைத்தவன் — மறைந்தான்.  அதை காத்தவன் — நிலைத்தான்.      அதை பெரிதாக்கினவன் — உயர்ந்தான்.

வித்தியாசம்?

 "உனக்குள்ளே எரியுற தீ.                    அது வைரம்— வைராகியம்".


🏆முடிவு

காலம் சென்றது.

சின்ன ராமசாமி —

இன்னும் காரணம் சொல்லிக்கொண்டே இருந்தான்.

பெரிய ராமசாமி —

தன் வலியை வைராகியமாக மாற்றி,தன் வாழ்க்கையை செதுக்கிக்கொண்டான்.

ஒரே அவமானம். ஒரே வலி.

ஒருத்தருக்கு அது முடிவு. இன்னொருத்தருக்கு அது தொடக்கம்...

🎯 “உன்னை உலகம் மதிக்கணும்னா, முதலில் நீ உன்னை செதுக்கு.”

— Mr. Thinker 💛❤️

Think. Feel. Build.

கொஞ்சம் யோசிங்க..

#MrThinkerBlogger #BusinessSchool #LifeLesson #Mindset #Vairagyam#SelfRespect #EntrepreneurLife #TamilBusiness #RealStories #ThinkFeelBuild #இது_கதை_இல்லை #வாழ்க்கை #வாழ்ந்த_வரலாறு

No comments:

Post a Comment

"War and peace"

 "வன்முறைக்கு எதிரான மனிதனின் குரல், மனிதன் மனிதத்தை மறந்துவிட்டான்". இந்த பூமி ஏற்கனவே எண்ணற்ற வன்முறைகளைக் கண்டுவிட்டது. எத்தனைய...