#LifeLesson
Business School – Episode #1
Business School – Episode #1
முன்னேற்றம் என்ற பெயரில் மனிதநேயத்தை இழந்து கொண்டிருக்கும் சமூகத்தின் மீது ஒரு திறந்த கேள்வி.
ஒரு வீட்டில் எழுபது அல்லது எண்பது வயதான ஒரு பெரியவர் இருந்தால்…
அவர் அந்த வீட்டின் ஆசீர்வாதமா?அல்லது பாரமா?
இந்த கேள்வி என்னை சில நாட்களாக அமைதியாக இருக்க விடவில்லை.
நாம் வாழும் இந்த காலம் எங்கே சென்று கொண்டிருக்கிறது?
நாம் எதை முன்னேற்றம் என்று அழைக்கிறோம்?
பணமா? பதவியா? சுகவாசமா?
அல்லது மனிதநேயமா?
குடும்பத்தின் மையம் – கீழே உள்ள தலைமுறையா? மேலே உள்ள தலைமுறையா?
இன்று பெரும்பாலான குடும்பங்களில் நாம் காணும் ஒரு நிலை என்னவென்றால் –
நம் குழந்தைகளுக்கு நாம் அளிக்கும் அன்பு, மரியாதை, பாதுகாப்பு…
அதே அளவு நம் பெற்றோருக்கு கிடைக்கிறதா?
குழந்தைகளை கடவுளாகக் கருதும் நாம்,
நம்மை உருவாக்கியவர்களை ஏன் சாதாரண மனிதர்களாகவே பார்க்கிறோம்?
ஒரு முறை கொரிய நாட்டை சேர்ந்த என் நண்பர் ஒருவர் – என் வீட்டிற்கு வருகை தந்திருந்தார் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தை கால் தடுமாறி கீழே சாதாரணமாக விழுந்தது,அதை பார்த்தவுடன் அனைவரும் பதட்டமடித்துக் கொண்டு தூக்க ஓடினார்கள். அப்பொழுது அவர் சொன்னார்,“
"எங்கள் நாட்டில் மேலே உள்ள தலைமுறையை(பெரியவர்கள்)நாங்கள் அதிக அன்பும் அக்கறையும் கொண்டு கவனிப்போம். கீழே உள்ள தலைமுறைகள் (குழந்தை) அதைப் பார்த்து வளர்வார்கள்,ஆனால் இங்கே தலை கீழாக நடப்பது போல் தோன்றுகிறது.”என்று
அந்த வார்த்தைகள் என் மனதை அழுத்தியது, ஏனென்றால் அது உண்மை.
முதியோர் இல்லங்கள் – முன்னேற்றமா? அல்லது மனசாட்சி கேள்வியா?
இன்று நாம் பெருமையாகச் சொல்கிறோம் –
“முதியோர் இல்லங்கள் இருக்கின்றன… வசதிகள் இருக்கின்றன…”
Pros (சாதகங்கள்):
•தனிமையில் இருக்கும் பெரியவர்களுக்கு பாதுகாப்பான இடம்.
•மருத்துவ வசதி, உணவு, பராமரிப்பு.
•குழந்தைகள் வெளிநாட்டில் அல்லது வேலையால் தங்க முடியாத சூழ்நிலையில் ஒரு ஆதரவு அமைப்பு.
Cons (பாதகங்கள்):
•குடும்ப பாசம் இல்லாத வாழ்க்கை.
•“நான் தேவையற்றவன்” என்ற மன உளைச்சல்.
•தலைமுறை இடைவெளி அதிகரிப்பு.
•குழந்தைகள் “பெரியவர்களைப் பார்த்துக் கொள்வது அவசியமில்லை” என்ற மனப்பான்மையுடன் வளர்வு.
நாம் விதைப்பது – நாமே அறுப்போமா?
ஒரு குடும்பத்தில் பெற்றோருக்கு மரியாதை இல்லாத சூழலில் வளர்ந்த குழந்தை,
நாளை தன் பெற்றோரை எப்படி நடத்தும்?
நாம் இன்று நம் பெற்றோர்களை அலட்சியம் செய்தால்,
நாளை நம் குழந்தைகள் அதையே கற்றுக் கொள்ள மாட்டார்களா?
நாம் சொல்லிக் கொடுக்காமல் கற்றுக் கொடுக்கிறோம்.
நாம் பேசாமல் பழக்கப்படுத்துகிறோம்.
நாம் செயலில் விதைப்பது, நாளை நம் வாழ்க்கையில் விளையும்.
இந்திய மண் -மதிப்பும் மரியாதை மிகுந்த மண்
ஒரு காலத்தில் இந்தியா பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்த நாடாக இருந்தது.
“மாதா, பிதா, குரு, தெய்வம்” என்ற ஒழுக்கம்
இன்று “நான், என் குடும்பம், என் சுகம்” என்ற சுயநலமாக மாறிவிட்டதா?
முன்னேற்றம் என்ற பெயரில்
நாம் மனிதநேயத்தை இழந்துவிட்டோமா?
எதிர்கால சந்ததிகளின் வளர்ச்சி
இன்று நம் குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள்?
•பெற்றோரின் தியாகத்தை மதிக்காத வாழ்க்கை.
•வசதிக்கு முக்கியத்துவம், உறவுக்கு இல்லை.
•வயது ஒரு பாரம் என்ற எண்ணம்.
இதன் விளைவு:
உணர்ச்சி குறைந்த சமூக அமைப்பு.
தனிமை அதிகரிப்பு.
குடும்பம் என்ற அமைப்பு பலவீனமாகும்.
முதியவர்களின் அனுபவ அறிவு சமூகத்தில் இழக்கப்படும்.
அப்படியென்றால்… நாம் என்ன செய்ய வேண்டும்?
1.குழந்தைகளுக்கு பெரியவர்களின் மதிப்பை நடைமுறையில் காட்ட வேண்டும்.
2.வாரத்திற்கு ஒரு நாள் பெற்றோருடன் நேரம் செலவிட வேண்டும்.
3.பெரியவர்களின் அனுபவத்தை குடும்ப முடிவுகளில் பயன்படுத்த வேண்டும்.
4.“பாசம் ஒரு பொறுப்பு” என்பதை உணர்த்த வேண்டும்.
இறுதி கேள்வி…
நாம் ஒரு நாள் அந்த வயதுக்கு செல்வோம்.
அப்போது நம்மை யார் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறோம்?
அதேபோல இன்றே நாம் நடந்து கொள்ளத் தயாரா?
இந்த உலகம் மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு முன்
நம் வீடு மாற வேண்டும்.
நம் மனசாட்சி மாற வேண்டும்.
“பெரியவர்கள் ஒரு பாரமல்ல…அவர்கள் நம் வாழ்க்கையின் வேர்கள்.”
வேர்களை வெட்டிக் கொண்டு நிழல் தேடும் சமூகமாக நாம் மாற வேண்டுமா?
அல்லது வேர்களை காத்து என்றென்றும் வளர்ச்சியை உணரும் சமூகமாக இருக்க வேண்டுமா?
தீர்மானம் நம்முடையது.
_Mr. Thinker💛
—
MR. THINKER – Reflection Series #01
Think Deep. Live Responsible.
#MrThinker #ReflectionSeries #FamilyValues #GenerationalResponsibility #HumanDevelopment
Next time:
MR. THINKER – Reflection #02
Topic: Are We Raising Strong Children or Emotionally Dependent Adults?
— Mr. Thinker சிந்தனை பதிவு
இன்றைய வேகமான வாழ்க்கையில், கணவன்–மனைவி இடையே சண்டைகள் வருவது அசாதாரணமல்ல.
ஆனால் அந்தச் சண்டை, கருத்து வேறுபாட்டிலிருந்து “ஈகோ”வாக மாறி, “இணைவு”விலிருந்து “இடைவெளி”யாக மாறும் போது தான் உறவு தளரத் தொடங்குகிறது.
பல தம்பதிகளை கவனித்த ஒரு கவுன்சிலராக (counselor) நான் ஒரு முக்கியமான விஷயத்தை கவனித்தேன்:
ஒரு ஆணுக்கு தனி குணம், தனி விருப்பம், தனி ஹாபி இருக்கும்.
ஒரு பெண்ணுக்கும் அவளுக்கே உரிய உலகம் இருக்கும்.
இருவரும் வேறுபட்டவர்கள் — அதுதான் இயற்கை. அந்த வேறுபாட்டை மாற்ற முயற்சிப்பது உறவை சிரமப்படுத்தும்; ஆனால் அதை புரிந்து கொள்ள முயற்சிப்பது உறவை அழகாக்கும்.
அவன் அவளின் ஆர்வத்தை சப்போர்ட் பண்ணட்டும்.
அவள் அவனின் கனவுகளை ஊக்குவிக்கட்டும்.
நம்ம வாழ்க்கையில் சண்டை இல்லாத வீடு எதுவும் இல்லை.
ஆனால் பிரச்சனை சண்டை அல்ல.
பிரச்சனை என்ன தெரியுமா?
அந்த பொதுவான விருப்பம் ஒரு பொழுதுபோக்கு அல்ல…
அது உறவை இணைக்கும் பாலம். 💛
👉 ஒரு பொதுவான “சேர்ந்து செய்யும் ஆர்வம்” (like hobby)இருக்கும் ஜோடிகள் — எவ்வளவு சண்டை இருந்தாலும் — உடைந்து போக மாட்டார்கள்.
இருவருக்கும் இடையில் அது ஒரு“பாலமாக” அமையும்போது, எந்த இடைவெளியும் நிரந்தரமில்லை.
அந்தப் பாலம் தான் — common Hobby, Shared Interest ( common interest ).
ஒரு உறவு பேசுவதால் மட்டும் நீடிக்காது,அது அனுபவங்களால் நீடிக்கும்.
🎵 சேர்ந்து பாடுவது
🍳 சேர்ந்து சமையல் செய்வது
🎨 சேர்ந்து பெயிண்டிங் செய்வது
💃🕺சேர்ந்து டான்ஸ் ஆடுவது
✈️ சேர்ந்து பயணம் செய்வது
🎡சேர்ந்து ஒரு கலை கற்றுக்கொள்வது
📸 சேர்ந்து Instagram ரீல்ஸ் எடுப்பது
🎥 YouTube வீடியோக்கள்
💭 சேர்ந்து உருவாக்கும் "லட்சியக் கனவு"
இவை வெறும் “ஹாபி” அல்ல, உறவை மீண்டும் இணைக்கும் ரப்பர் பேண்ட்.
🧠 மன அழுத்தத்தை குறைக்கும்.
❤️ ஈகோவை கரைக்கும்.
🤝 “நாம் ஒரு டீம்” என்ற உணர்வை தரும்.
😊 சண்டைக்குப் பிறகும் மீண்டும் பேசத் தூண்டும்.
💬 உரையாடலை இயல்பாக உருவாக்கும்.
சண்டை வந்தால் என்ன நடக்கும்?
வார்த்தைகள் குறையும்.
அமைதி பெரிதாகும்.
அமைதி வெறுப்பாக மாறும்.
ஆனால், இருவரும் சேர்ந்து ஒரு செயலில் ஈடுபட்டால் — (சமையல், பெயிண்டிங், தோட்டம், வேலை)…
அங்கே வார்த்தைகளை விட செயல் பேசும்.
ஒரு மணி நேரம் பிரியாணி சமைக்கும் போது,
“உப்பு கொஞ்சம் கம்மி…” என்று சொல்லும் அந்தச் சின்ன உரையாடல்
பல நாள் மௌனத்தை உடைக்கும் திறன் கொண்டது.
சில நேரங்களில், சமையல் தான் சிகிச்சை.
சில நேரங்களில், ஒரு தூரிகை தான் தீர்வு.
இணைந்து பாடுவது வெறும் பொழுதுபோக்கு அல்ல.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வது நேரத்தை வீணாக்குவது அல்ல.
அது Teamwork.
ஒரு பாடலை இணைந்து பாடும்போது,
ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்கும் அந்த நொடி —
அங்கே உள்ள கசப்புகள் கரைகின்றன.
“நான்” என்ற ஈகோ
“நாம்” என்ற உணர்வாக மாறும் தருணம் —
அதுதான் உறவின் மறுபிறப்பு.
ஈகோ இருக்கும் இடத்தில் அன்பு தங்கி இருக்காது.
ஆனால், ரசனை இருக்கும் இடத்தில் ஈகோ நீண்ட நேரம் நிலைக்காது.
வீட்டுச் சுவர்கள் பிரச்சினைகளை பெரிதாக்கும்.
அதே பிரச்சினைகள் ஒரு கடற்கரையில் நின்றால் சிறியதாகத் தெரியும்.
ஒரு வார இறுதி பயணம்…
ஒரு லாங் டிரைவ்…
ஒரு சின்ன தேநீர் நேர உரையாடல்...
புதிய இடம், புதிய காற்று, புதிய முகங்கள் —
உள்ளிருக்கும் மன அழுத்தத்தை கரைக்கிறது.
அப்போது தான் புரியும்:
“நாம் சண்டை போட்ட விஷயம் இதுக்காகத்தானா?”
சூழல் மாறினால் மனமும் மாறும்.
மனம் மாறினால் உறவும் மலரும்.
பிரச்சினைகள் பெரியவை அல்ல.
பிரிந்து நிற்பதே பெரிய பிரச்சினை.
“உனக்கு இது பிடிக்கும்.”
“எனக்கு அது பிடிக்கும்.”
இவ்வாறு தனித்தனியாக வாழும்போது,
கணவன் ஒரு தீவு.
மனைவி இன்னொரு தீவு.
இரண்டு தீவுகளுக்கும் நடுவே கடல் —
அதுதான் The Gap.
அந்த இடைவெளியை நிரப்ப ஒரு “பொதுவான புள்ளி” தேவை.
சேர்ந்து சமூக சேவை செய்வது ஆகலாம்
தோட்டம் வளர்ப்பது ஆகலாம்
உடற்பயிற்சி செய்வது ஆகலாம்
எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.
இணைக்கும் ஒரு விஷயம் இருந்தால் போதும்.
திருமணம் என்பது
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பது அல்ல;
இருவரும் சேர்ந்து ஒரே திசையை நோக்கிப் பார்ப்பதுதான்.
உங்களுக்குள் எத்தனை சண்டைகள் இருந்தாலும் —
ஒரு Common Interest கண்டுபிடியுங்கள்.
அந்த ஒரு ஹாபி
உங்கள் கசப்புகளை மறந்து
உங்களை மீண்டும் காதலிக்க வைக்கும் மருந்தாக அமையும்.
"தனித்தனியாக வாழ்வது சாதாரணம்.இணைந்து ரசிப்பதே உன்னதம்".
இன்று இரவு உங்கள் துணையிடம் ஒரு கேள்வி கேளுங்கள்:
“நம்ம இருவருக்கும் பிடித்த ஒரு விஷயம் சேர்ந்து தொடங்கலாமா?”
அது சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை.
ஒரு செடியை நட்டாலும் சரி.
ஒரு பாடலை கற்றுக்கொண்டாலும் சரி.
ஒரு சின்ன வீடியோ எடுத்தாலும் சரி.
ஆனால் சேர்ந்து செய்யுங்கள்.
✅ புதிய அனுபவங்களை உருவாக்குங்கள்
✅ சேர்ந்து சிரிக்கும் தருணங்களை உருவாக்குங்கள்
✅ இருவருக்கும் பிடித்த ஒன்றை கண்டுபிடியுங்கள்
—, Mr. Thinker💛✨
“Think Deep. Live Strong. Love Better.”
Follow for more relationship wisdom.
Artificial Intelligence (AI) இன்று உலகத்தை மாற்றிக் கொண்டிருக்கும் ஒரு டிஜிட்டல் புரட்சி. Chatting இருந்து Doing வரை — AI ஒரு புதிய காலத்தை உருவாக்குகிறது.
ஒரு காலத்தில் Artificial Intelligence (AI) என்பது சினிமாவில் மட்டுமே இருந்த கற்பனை. இன்று அது நம் கையில் இருக்கும் மொபைல் போனிலிருந்து உலகளாவிய வணிக நிறுவனங்கள் வரை எல்லாவற்றிலும் கலந்திருக்கிறது.
Artificial Intelligence என்பது மனித சிந்தனை மற்றும் கற்றல் திறன்களை கணினி மூலம் உருவாக்கும் தொழில்நுட்பம்.
இவை அனைத்தும் சேர்ந்து AI-யை ஒரு சக்திவாய்ந்த தொழில்நுட்பமாக மாற்றுகின்றன.
![]() |
| ai-business.jpg |
AI Chatbots 24/7 வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குகின்றன.
பெரிய அளவிலான data-வை analyze செய்து future sales prediction வழங்குகிறது.
Automation மூலம் manpower செலவு குறைகிறது.
Repeated வேலைகளை AI செய்யும்போது மனிதர்கள் creative வேலைகளில் கவனம் செலுத்த முடிகிறது.
Sales prediction, Risk analysis போன்ற விஷயங்களில் AI மிக துல்லியமான கணிப்புகளை வழங்குகிறது.
![]() |
| ai-education.jpg |
ஒவ்வொரு மாணவரின் திறனை அடிப்படையாகக் கொண்டு தனிப்பட்ட பாடத்திட்டம்.
24 மணி நேரமும் கிடைக்கும் டிஜிட்டல் உதவி.
Automatic grading systems மூலம் நேரம் சேமிப்பு.
AI மூலம் புதிய மொழி மற்றும் திறன்களை வேகமாக கற்றுக்கொள்ளலாம்.
![]() |
| ai-marketing.jpg |
Blog, Ads, Social Media content சில நிமிடங்களில் உருவாக்க முடியும்.
Customer behavior அடிப்படையில் personalized ads தனிப்பட்ட விளம்பரங்கள்.
Keyword research மற்றும் ranking improvement மேம்படுத்த AI உதவுகிறது.
எந்த Product யாருக்கு பிடிக்கும் என்று AI முன்கூட்டியே கணிக்கிறது
Chatting மட்டும் போதாது. Doing தான் வெற்றிக்கு வழி.
Think Smart. Use AI. Grow Beyond Limits.
— Mr. Thinker
சுய கவனிப்பு பயணம் (SELF-CARE TRAVEL).
கடலும், தியானமும்: ஒரு தொழிலதிபரின் சுய-தேடல் பயணம்!
"சிந்தனை என்பது ஒரு கடல் போன்றது; அது ஆழமாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும்."
வணக்கம் நண்பர்களே,
நான் உங்கள் Mr.Thinker.
ஒரு பிசினஸ்மேனாக எனது அன்றாட வாழ்க்கை எப்போதுமே திட்டமிடப்பட்டது. எனது "Daily Uniform" போல, என் உழைப்பும் சீரானது. ஆனால், சில நேரங்களில் இயந்திரத்தனமான அந்த ஓட்டத்திலிருந்து விடுபட்டு, இயற்கையோடு உரையாட வேண்டியது அவசியமாகிறது. சமீபத்தில் நான் மேற்கொண்ட இந்த Self-care Ride எனக்குள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
"சிந்தனை"Mr. Thinker's Thoughts:
அமைதி (Peace): கடற்கரையில் மறையும் அந்தச் சூரியன், ஒரு நாள் முடிவதைக் குறிப்பதல்ல; அடுத்த நாள் ஒரு புதிய தொடக்கத்திற்குத் தயாராவதைக் குறிக்கிறது.
தெளிவு (Clarity): அலைகளின் சத்தத்திற்கு இடையே அமர்ந்திருப்பது, பிசினஸில் உள்ள சிக்கலான முடிவுகளை எடுக்கத் தேவையான மனத் தெளிவைத் தருகிறது.
எளிமை (Simplicity): எனது வழக்கமான எளிமையான உடையிலேயே (Uniform) இந்தப் பயணத்தை மேற்கொண்டேன். இது ஆடம்பரத்தை விட அக அமைதியே முக்கியம் என்பதை எனக்கு உணர்த்தியது.
எனது பிளாக்கிற்கான (Mr Thinker Blogger) சிறகுறிப்பு:
உலகில் உள்ள அத்தனை இசையையும் கேட்டு ரசிக்க நம் ஆயுட்காலம் போதாது. இது ஒரு கசப்பான உண்மை போலத் தெரிந்தாலும், இதில் தான் வாழ்வின் உன்னதமான தத்துவம் ஒளிந்திருக்கிறது.
இன்றைய டிஜிட்டல் உலகில் எதையும் இழந்துவிடக் கூடாது என்ற பதற்றம் (FOMO - Fear of Missing Out) நமக்குள் இருக்கிறது. ஆனால், எல்லாவற்றையும் நுகர வேண்டும் என்ற வேகம், நம்மிடம் இருக்கும் ஒரு சில அழகான விஷயங்களை ரசிக்க விடாமல் தடுத்துவிடுகிறது. "எல்லா இசையையும் கேட்க முடியாது" என்பதை ஏற்றுக்கொள்வதே மன அமைதிக்கான முதல் படி.
கடல் போன்ற இவ்வுலக இசையில், நம் காதுகளுக்குக் கிடைப்பது ஒரு சில துளிகளே.
"நாம் கேட்கத் தவறிய லட்சக்கணக்கான பாடல்களில் நம் வாழ்க்கை அடங்கியிருக்கவில்லை; நம் இதயத்திற்கு நெருக்கமாக நாம் கேட்டுக்கொண்டிருக்கும் அந்த ஒரு சில மெட்டுக்களில் தான் நம் வாழ்வின் லயம் இருக்கிறது."
இழப்பது குறையல்ல;
தேர்ந்தெடுப்பதே கலை! 🎶"
Missing out is not a loss;
choosing wisely is an art! 🎶"
"Philosophical Thought "
இந்தப் பதிவு இசையை பற்றியது மட்டுமல்ல, யோசியுங்கள்!
"வளமான தமிழ்நாடு" (prosperous Tamilnadu)
இது ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் மகிழ்ச்சி மற்றும் ஒட்டுமொத்த முன்னேற்றத்தைக் குறிக்கும் ஒரு சொல்லாகும்.
நிலையான வளர்ச்சி:
தற்காலிக உதவி vs நிரந்தர மாற்றம்
ஒரு குடிமகனின் வாழ்க்கைத் தரத்தை (Standard of Life) உயர்த்துவதற்கு, கையில் கொடுக்கும் பணத்தை விட, அரசு பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் நவீனப்படுத்துவதே சிறந்த தீர்வாகும்...
1.பழைய பள்ளிகளை மேம்படுத்துதல் (Old Schools vs Cash)
அரசு வழங்கும் இந்த 5,000 ரூபாயை பழைய பள்ளிக் கட்டிடங்களைப் புதுப்பிக்கவும், நவீன வசதிகளை உருவாக்கவும் பயன்படுத்தினால்:
திறன் மேம்பாடு: ஒருமுறை கிடைக்கும் 5,000 ரூபாயை விட, ஒரு மாணவனுக்கு நவீன ஆய்வகம் அல்லது கணினிப் பயிற்சி கிடைத்தால், அவன் மாதத்திற்கு 30,000 ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்கும் தகுதியைப் பெறுவான். இதுவே நிரந்தரமான வாழ்க்கைத் தர உயர்வு.
தனியார் பள்ளி மோகம் குறையும்: அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்தால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் தங்கள் பணத்தைத் தனியார் பள்ளிகளுக்குக் கொடுப்பது தவிர்க்கப்படும். இது அவர்களுக்கு ஒரு பெரிய சேமிப்பாக அமையும்.
2. பழைய மருத்துவமனைகளை நவீனப்படுத்துதல் (Old Hospitals vs Cash)
மருத்துவச் செலவுகள்தான் ஒரு குடும்பத்தை வறுமைக்குத் தள்ளும் முக்கியக் காரணி:
தரமான சிகிச்சை: பழைய அரசு மருத்துவமனைகளில் நவீன ஸ்கேன் (Scan) மற்றும் பரிசோதனை வசதிகள் இருந்தால், ஒரு சாதாரண குடிமகன் தனியார் மருத்துவமனைக்குச் சென்று கடனாளியாக வேண்டிய அவசியம் இருக்காது.
உழைக்கும் வர்க்கத்தின் ஆரோக்கியம்: சிறந்த மருத்துவக் கட்டமைப்பு இருந்தால், மக்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். ஆரோக்கியமான மக்கள் இருக்கும் மாநிலமே பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும்.
3. குடிமகனின் கண்ணியம் (Empowerment vs Dependency)
மக்களை அரசின் உதவியையே எதிர்பார்த்து இருக்கச் செய்வதற்கும் (Dependency), அவர்களைச் சொந்தக் காலில் நிற்க வைப்பதற்கும் (Empowerment) பெரிய வித்தியாசம் உள்ளது:
தற்சார்பு: உலகத்தரம் வாய்ந்த கல்வி மற்றும் சுகாதாரத்தை அரசு வழங்கினால், ஒரு குடிமகன் தன் சொந்த முயற்சியால் முன்னேற முடியும். இதுவே ஒரு சமூகத்திற்கு கௌரவத்தைத் தரும்.
பொருளாதாரப் பார்வை (The Business View)
ஒரு மாநிலம் தனது வருமானத்தைப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற "மூலதனச் செலவுகளில்" (Capital Expenditure) முதலீடு செய்யாமல், வெறும் இலவசங்களுக்கு மட்டும் செலவு செய்தால்:
கடன் சுமை அதிகரிக்கும்: தமிழகத்தின் கடன் சுமை ஏற்கனவே 9 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இந்த இலவசப் பணத்திற்கான வட்டியை வருங்காலத் தலைமுறையினர்தான் செலுத்த வேண்டியிருக்கும்.
விலைவாசி உயர்வு: உற்பத்தி அதிகரிக்காமல் சந்தையில் அதிகப் பணப்புழக்கம் ஏற்பட்டால், அது அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்த வழிவகுக்கும்.
பணியாளர்களின் தரம்: பழைய பள்ளிகள் நவீன தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாட்டுடன் புதுப்பிக்கப்படாவிட்டால், இன்னும் 10 ஆண்டுகளில் நமது தொழில்களுக்குத் தேவையான திறமையான பணியாளர்களை எங்கிருந்து பெறுவோம்?
நிதிப் பொறுப்பு: இதுபோன்ற இலவசத் திட்டங்களுக்காக மாநிலத்தின் கடன் சுமை அதிகரிக்கும் போது, எதிர்காலத்தில் அரசு அதைச் சரிசெய்ய தொழில்கள் மீதான வரிகளை (GST/சொத்து வரி/தொழில் வரி) உயர்த்துமா?
சேவையின் தரம் = வாழ்க்கைத் தரம்
"கொடுக்கும் ₹5,000 ஒரு மாதம் உதவும். ஆனால், நவீனப்படுத்தப்பட்ட அரசுப் பள்ளியும், மருத்துவமனையும் ஒரு தலைமுறையையே மாற்றும். ஒரு குடிமகனின் உண்மையான வளர்ச்சி என்பது தற்காலிகப் பணப் பரிமாற்றத்தில் இல்லை; அது தரமான கட்டமைப்பில்தான் உள்ளது. ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வேண்டுமென்றால், நாம் அவர்களின் வங்கி இருப்புக்கு முன்னால், அவர்களுக்குக் கிடைக்கும் சேவையின் தரத்தை உயர்த்த வேண்டும்."
முடிவு: "சேவையின் தரத்தை" (Standard of Service) உயர்த்துவதே ஒவ்வொரு குடிமகனின் "வாழ்க்கைத் தரத்தை" உயர்த்துவதற்கான ஒரே வழி. ஒரு ஸ்மார்ட் பள்ளியோ அல்லது சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையோ 30 ஆண்டுகளுக்குப் பலன் தரும்; ஆனால் ரொக்கப் பணம் 30 நாட்களுக்கு மட்டுமே உதவும்.
MONEY IS FREE - we create new concept
Aura Invesmart: "பணம் இலவசம்" - ஒரு புதிய பார்வை,,
இந்தத் தத்துவத்தின்படி, பணம் என்பது உங்கள் வாழ்நாளைக் கொடுத்து வாங்கும் ஒன்றல்ல; மாறாக, சரியான அமைப்பின் (System) மூலம் உருவாக்கப்படும் ஒரு புதுப்பிக்கத்தக்க வளமாகும். ஒருமுறை அந்த அமைப்பை உருவாக்கிவிட்டால், அது ஈட்டித் தரும் வருமானம் "இலவசம்". ஏனெனில், அதை ஈட்ட உங்கள் உழைப்பு மீண்டும் தேவைப்படுவதில்லை.
விரிவான உள்ளடக்க அமைப்பு (Detailed Content Structure)
1. கவனத்தை ஈர்க்கும் தொடக்கம்: வழக்கமான சிந்தனையை மாற்றுதல்
கருத்து: உங்களிடம் உள்ள மிகவும் விலைமதிப்பற்ற சொத்து உங்கள் "நேரம்". அந்த நேரத்தைக் கொடுத்துதான் நீங்கள் பணத்தை "வாங்குகிறீர்கள்" என்பதை மக்களுக்கு உணர்த்துங்கள்.
மாற்றம்: ஆனால், Aura Invesmart-இல் நாங்கள் பணத்தை இலவசமாகக் கருதுகிறோம். அதாவது, உங்கள் கடின உழைப்பால் அல்லாமல், உங்களின் புத்திசாலித்தனமான முதலீட்டுத் திட்டங்களால் பணம் உங்களைத் தேடி வர வேண்டும்.
2. "இலவச" பணத்தின் மூன்று தூண்கள்
அறிவே திறவுகோல் (Knowledge is Key): செல்வத்தைப் பெருக்குவதற்கான தகவல்கள் இன்று அனைவருக்கும் கிடைக்கின்றன. இந்த டிஜிட்டல் யுகத்தில் "எப்படி முதலீடு செய்வது" என்ற அறிவு இலவசம்; அதைச் செயல்படுத்தும் ஒழுக்கம் மட்டுமே உங்களுக்குத் தேவை.
கூட்டு வட்டியே இயந்திரம் (Compounding is the Engine): நீங்கள் முதலீடு செய்யும்போது, உங்கள் பணம் பல மடங்காகப் பெருகும். இந்த வளர்ச்சிதான் "இலவசப் பணம்". ஏனெனில், இதற்காக நீங்கள் ஒரு நிமிடம் கூட கூடுதல்
தானியங்கி முறையே வாகனம் (Automation is the Vehicle): SIP அல்லது தானியங்கி முதலீட்டு முறைகளை (Automated Portfolios) அமைப்பதன் மூலம், "எப்போது, எப்படி முதலீடு செய்வது" என்ற மன அழுத்தத்தை நீங்கள் குறைக்கலாம்.
3. உணர்வுப்பூர்வமான வேண்டுகோள் (The Emotional Appeal)
"பணம் எப்போது உங்கள் மன அமைதியையோ, குடும்ப நேரத்தையோ அல்லது உங்கள் ஆரோக்கியத்தையோ விலையாகக் கேட்கவில்லையோ, அப்போதுதான் அது உண்மையான இலவசப் பணம்."
நன்றி
கண்ணன் அர்ஜுனராஜா
"வன்முறைக்கு எதிரான மனிதனின் குரல், மனிதன் மனிதத்தை மறந்துவிட்டான்". இந்த பூமி ஏற்கனவே எண்ணற்ற வன்முறைகளைக் கண்டுவிட்டது. எத்தனைய...